சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை, எங்கள் குடும்பத்துடன் எங்களின் பூர்வீக கிராமத்தில் (வெளியகரம் என்ற பள்ளிப்பட்டு ஒன்றித்தில் உள்ள தமிழ்நாட்டின் வடக்கு கடைக்கோடி கிராமம்) உள்ள குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றிறுந்தோம்.
எங்களின் குலதெய்வம் பெரியாண்டவர், ஆலாலகங்கா என்பதை அன்று தான் தெரிந்து கொண்டேன். மாமரத்தையும் சிறுகல்லையும் தமது இருப்பாக கொண்ட தெய்வம். முட்புதர் சூழ்ந்த காட்டில், குலதெய்வ வழிபாட்டு முறைகள் சிக்கலகாவும் தீவிரமாகவும் இருக்கும் என்று எங்கள் பாட்டி கூறுவார். 108 தேங்காய், ஆடு, பன்றி, கோழி ஆகிய 3 உயிர்ப்பலி என ருத்திரமான பூசைகள் முன்பு நடக்குமாம். ஆனால் தற்போது எங்கள் கிராமத்திலிருக்கும் பூசாரிக்கும், வயதான பெரியவர்களுக்கும் அம்முறைகள் பற்றி தெரியவில்லை. எங்கள் தெய்வம் இருக்கும் இடத்தை சரியாக அடையாளம் காணவே பல விவாதமும் நீண்ட தேடுதலும் நிகழ்ந்தது.
கடைசியான எனது சிறு வயதில் எனக்கு காது குத்தும் போது குலதெய்வ வழிபாடு நடந்ததாக எனது தந்தை சொன்னார். அவருக்கும் முறைகள் பற்றிய புரிதல் இல்லை. தனது பனி படர்ந்த ஞாபகத்தில் எனது பாட்டி குலதெய்வ வழிபாட்டு முறையை எங்களுக்கு சொல்லி வழிநடத்தினார். எங்கள் குடும்ப வழக்கம் பற்றி, எனது அடுத்தத் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க நான் என்ன வைத்திருக்கிறேன் என்று எண்ணியபோது வருத்தம் ஏற்பட்டது. சடங்குகள் வெறும் நிகழ்வுகள் மட்டுமல்ல. அவை ஆண்டாண்டுகால மனிதத்தின் நம்பிக்கை. எனக்கு முந்தைய தலைமுறை வரை காலங்காலமாக நடைபெற்ற முறைகள், கண்ணுக்கு முன்னே கரைந்து வருவதை தவிர்கமுடியவில்லை. பிற்பாடு ஒரு நாள் எனது கிராமத்துக்கு சென்று, மிச்சமிருக்கும் பாரம்பரிய அறிவை பதிவு செய்யவேண்டும் என எண்ணியுள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக