புதன், 24 பிப்ரவரி, 2010

கண்ணுக்கு முன்னே தொலைபவை...

குல தெய்வ வழிபாடு என்பது ஒரு சிறு துளி தான். தன்முனைப்பு பெருகிவிட்ட இக்காலச்சூழலில் எல்லாம் எளிமையாகவும் விரைவாகவும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் வங்கியில் பணம் எடுக்க முழு அரை நாள் வங்கியில் காத்திருந்த காலம் போய், இப்போது ATMல் எனக்கு முன் இரண்டு பேர் காத்திருப்பதையும் பொருத்துக்கொள்ள முடிவதில்லை.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் மைலாப்பூர் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எனது மேசையை துடைத்துக்கொண்டிருந்த 70 வயது பெரியவர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்துக்கொண்டிருந்தார். பிறகு அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவர் ஒரு திண்டிவனம் பக்கம் தெருக்கூத்து வாத்தியார் எனவும் இப்போதெல்லாம் அதற்கு மரியாதையில்லை என்பதாலும் அவரின் பிள்ளைகள் அவரை கவனிக்காததாலும் ஓட்டலில் பாத்திரம் கழுவ வந்ததாகவும் சொன்னார். வருத்தமாக இருந்தது. நம் காலகட்டத்திலேயே டேப்ரிக்காடர், 5, 10 காசு பில்லைகள், கைத்துரிகை பேனர்கள், அஞ்சல் அட்டை என பல பொருட்கள் காணாமல் போய்விட்டன.

ஆளைக்கொல்லும் தொழில்நுட்பம் நமக்கு அவசியம் தானா? இவைகளை நாம் இழப்பதைவிட இவைகளை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருப்பது வலிக்கிறது. குறைந்தபட்சம் நாம் இழப்பவற்றின் மிச்சங்களை கொஞ்சம் சேகரித்து வைப்போம். அவை மியூசியத்தில் வைத்து நமக்கு பின் வரும் தலைமுறை அடையாளம் காணவாவது பயன்படட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக