புதன், 24 பிப்ரவரி, 2010
கிணறு வெட்ட பூதம்...
பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சியின் போது கிராம பஞ்சாயத்தின் அமைப்பை பங்கேற்பாளர்களுக்கு விளக்க ஒரு சைக்கிள் படத்தை வரைந்து, அதன் பாகங்களை பஞ்சாயத்து அமைப்பின் அங்கங்களுடன் பொறுத்திப் புரியவைப்போம். சைக்கிள் படத்தை முதன்முதலில் போர்டில் வரையும் போது எனக்கு சைக்கிள் படம், அவ்வளவு சுத்தமாக வரவில்லை. பங்கேற்பாளர்கள் எனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒன்றிரண்டு கதைகள் சொல்லி அந்த வகுப்பை ஒப்பேத்தினேன். எளிமையான சைக்கிள் படம் தானே, சுலபமாக வரைய முடியும் என்ற எனது குருட்டு நம்பிக்கை அதை வரைய முயற்சிக்கும் போது அவ்வளவு சுலபமில்லை என தெரியவந்தது. இது போல பல வேலைகளை வெளியிலிருந்து பார்க்கும் போது சுலபமாகத் தெரிந்தாலும் அதில் ஈடுபடும் போதுதான் அதன் வீரியம் தெரியவருகிறது. இதை நாட்டார் வழக்கில் “கிணறு வெட்ட பூதம் வந்தது” என கூறுவார்கள். பார்க்கும் போது சாதாரண கட்டமைப்பாக தெரியும் கிணறை வெட்டுவது சுலபமில்லை. எல்லா செயல்களும் அதற்கேயுரிய சிக்கல்களை கொண்டுள்ளது என்பதை பல சந்தர்பங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக